Sunday, June 26, 2011
25,50 பைசா நாணயங்கள் புதன்கிழமை முதல் செல்லாது.
யாரேனும் 25 பைசா, 50 பைசா நாணயங்களை சேமித்து வைத்திருந்தால் அவற்றை வங்கிகளில் கொடுத்து ரூபாய் நோட்டுக்களாக மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாட்டுடமையாக்கப்பட்ட 19 வங்கிகளின் கிளைகளில் 25 பைசா, 50 பைசா நாணயங்களை கொடுத்து பணம் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
:WHAT ARE THE BANKS ARE NATIONALIZED BANKS?
1 பாரத ஸ்டேட் வங்கி
2 ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத்
3 ஸ்டேட் பாங்க் ஆப் இந்தோர்
4 ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர்
5 ஸ்டேட் பாங்க் ஆப் பாடியாலா
6 ஸ்டேட் பாங்க் ஆப் சவுராஷ்ட்ரா
7 ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர்
8 ஆந்திரா வங்கி
9 பாங்க் ஆப் பரோடா
10 பாங்க் ஆப் இந்தியா
11 பாங்க் ஆப் மஹாராஷ்டிரா,
12 கனரா வங்கி
13 கார்போரேஷன் வங்கி
14 தேனா வங்கி
15 இந்தியன் வங்கி
16 இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
17 ஓரியன்டல் பேங்க ஆப் காமர்ஸ்
18 பஞ்சாப் நேஷனல் வங்கி
19 பஞ்சாப் சிந்து பாங்க்
20 சின்டிகேட் பேங்க்
21 யூனியன் பாங்க் ஆப் இந்தியா
22 யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா
23 விஜயா வங்கி
24
யூகோ வங்கி
B இந்தியத் தனியார் வங்கிகள்
25 பாரத் ஓவர்சீஸ் வங்கி லி
26 கத்தோலிக்க சிரியன் வங்கி லி.
27 டெவலப்மென்ட் க்ரெடிட் வங்கி லி.
28 பெடரெல் வங்கி லி.
29 கர்நாடகா வங்கி லி.
30 லார்ட் கிருஷ்ணா வங்கி லி.
மாநபியின் வின்னுலகப்பயனமும்- மானுடர்கள் பெறவேண்டிய படிப்பினைகளும்!
இந்த வசனத்தில் அல்லாஹ் மாநபி [ஸல்] அவர்களின் விண்ணுலக பயணத்தை மேற்கோள் காட்டி, அந்த பயணம் 'நம்முடைய அத்தாட்சிகளை அவருக்கு காண்பிப்பதற்காக' என்று சொல்லிக்காட்டுகிறான். நபி[ஸல்] அவர்களின் இந்த பயணம் விரிவான செய்திகளை அடக்கியது எனவே, அதை சுருக்கமாக பார்த்துவிட்டு இந்த பயணத்தின் மூலம் முஸ்லிம்கள் பெற வேண்டிய படிப்பினைகளை விரிவாக பார்ப்போம்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" நான் இறையில்லம் கஅபாவில் இருமனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. என்னுடைய நெஞ்சம் காறையெலும்பிலிருந்து அடி வயிறு வரை பிளக்கப்பட்டது. பிறகு ஸம்ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு, (என் இதயம்) நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது. மேலும், கோவேறுக் கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான 'புராக்' என்னும் (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் (அதில் ஏறி) ஜிப்ரீல்(அலை) அவர்களுடன் சென்றேன். நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை), 'ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். 'உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?' என்று கேட்கப்பட்டது. அவர், 'முஹம்மது" என்று பதிலளித்தார். 'அவரை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஆம்" என்றார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும்! அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான் ஆதம்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள், '(என்) மகனும் இறைத் தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக!" என்றார்கள்.
பிறகு இரண்டாவது வானத்திற்கு நாங்கள் சென்றோம். 'யார் அது?' என்று வினவப்பட்டது. அவர், 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்க, 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'முஹம்மது" என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'ஆம்" என்று பதிலளித்தார். 'அவரின் அவரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்லவருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான், ஈஸா(அலை) அவர்களிடமும் யஹ்யா(அலை) அவர்களிடமும் சென்றேன். அவ்விருவரும், 'சகோதரரும் நபியுமாகிய உங்களின் வரவு நல்வரவாகட்டும்" என்றார்கள்.
பிறகு, நாங்கள் மூன்றாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" பதிலளித்தார். '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு, நான் யூசுஃப் (அலை) அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்து) சொன்னார்கள்.
பிறகு, நாங்கள் நான்காவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் இத்ரீஸ்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்து) சொன்னார்கள்.
பிறகு, நாங்கள் ஐந்தாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்லவருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நாங்கள் ஹாரூன்(அலை) அவர்களிடம் சென்றோம். நான் அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்து) சொன்னார்.
பிறகு நாங்கள் ஆறாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று பதிலளிக்கப்பட்டது. 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று வாழ்த்தினார்கள். நான் அவர்களைக் கடந்து சென்றபோது அவர்கள் அழுதார்கள். 'நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர், 'இறைவா! என் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்தினரிலிருந்து சொர்க்கம் புகுவார்கள்" என்று பதிலளித்தார்கள்.
பிறகு நாங்கள் ஏழாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று வினவப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச்சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது... நான் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், 'மகனும் நபியுமான உங்கள் வரவு நல்வராவாகட்டும்" என்றார்கள்.
பிறகு, 'அல் பைத்துல் மஃமூர்' எனும் 'வளமான இறையில்லம்' எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. நான் அதைக் குறித்து ஜிப்ரீலிடம் கேட்டேன். அவர், 'இதுதான் 'அல் பைத்துல் மஃமூர்' ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகிறார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இதனிடம் வர மாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாம் விடும்" என்றார். பிறகு, (வான எல்லையிலுள்ள இலந்தை மரமான) 'சித்ரத்துல் முன்தஹா' எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. அதன் பழங்கள் (யமனில் உள்ள) 'ஹஜ்ர்' எனுமிடத்தின் (உற்பத்திப் பொருளான மண்) கூஜாக்கள் போல் இருந்தன. அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போல் இருந்தன. அதன் வேர்ப்பகுதியில் நான்கு ஆறுகள் இருந்தன. (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய) இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் (யூப்ரடீஸ், நைல் ஆகிய) இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. நான் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் அவற்றைக் குறித்துக் கேட்டேன். அவர்கள், 'உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ளவையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்" என்று பதிலளித்தார்கள். பிறகு என் மீது ஐம்பது (நேரத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் முன்னேறிச் சென்று இறுதியில் மூஸா(அலை) அவர்களை அடைந்தேன். அவர்கள், 'என்ன செய்தாய்?' என்று கேட்டார்கள். நான், 'என் மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன" என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'எனக்கு மக்களைப் பற்றி உங்களை விட அதிகமாகத் தெரியும். நான் பனூ இஸ்ராயீல்களுடன் பழம் நன்கு அனுபவப்பட்டுள்ளேன். உங்கள் சமுதாயத்தினர் (இதைத்) தாங்க மாட்டார்கள். எனவே, உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் (தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள்" என்றார்கள். நான் திரும்பச் சென்று இறைவனிடம் (அவ்வாறே) கேட்டேன். அதை அவன் நாற்பதாக ஆக்கினான். பிறகும் முதலில் சொன்னவாறே நடந்தது. மீண்டும் (சென்று நான் கேட்க, இறைவன் அதை) முப்பதாக ஆக்கினான். மீண்டும் அதைப் போன்றே நடக்க (அதை) இறைவன் இருபதாக ஆக்கினான். நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றபோது அவர்கள் முன்பு போன்றே சொல்ல (நான் இறைவனிடம் மீண்டும் குறைத்துக் கேட்க) அவன் அதை ஐந்தாக ஆக்கினான். பிறகு நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்கள், 'என்ன செய்தாய்?' என்று கேட்க, 'அதை இறைவன் ஐந்தாக ஆக்கிவிட்டான்" என்றேன். அதற்கு அவர்கள், 'முன்பு சொன்னதைப் போன்றே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) சொன்னார்கள். அதற்கு, 'நான் (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக் கொண்டேன்" என்று பதிலளித்தேன். அப்போது (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து அசரீரியாக), 'நான் என் (ஐந்து வேளைத் தொழுகை எனும்) விதியை அமல்படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து வேளையாகக் குறைத்து கடமையை) லேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை நான் வழங்குவேன்" என்று அறிவிக்கப்பட்டது. [நூல்;புஹாரி எண் 3207 ]
முஸ்லிமில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் காபாவில் இருந்து பைத்துல் முகத்தஸ் சென்ற விபரங்கள் கூடுதலாக கிடைக்கின்றன.
எனது விண்ணேற்றப் பயணத்திற்காக) நாட்டுக்கழுதைக்கும் கோவேறுக்கழுதைக்கும் இடைப்பட்ட உருவத்தில், வெள்ளை நிறமுடைய, பார்வை எட்டுகிற தூரத்திற்குத் தனது காலைத் தூக்கி ஓர் எட்டு வைக்கும், 'புராக்' எனும் உயரமான ஒரு (மின்னல் வேக) வாகனம் அளிக்கப் பட்டேன். அதிலேறி நான் (ஜெரூசலேத்திலுள்ள இறையாலயம்) பைத்துல் மக்திஸ்வரை சென்றேன். பிறகு இறைத்தூதர்கள் தமது வாகனத்தைக் கட்டி வைக்கும் வளையத்தில் எனது வாகனத்தைக் கட்டி வைத்து விட்டு, அந்த இறையாலத்திற்குள் நுழைந்து இரண்டு ரக்அத்கள் தொழுதேன். பிறகு நான் அங்கிருந்து புறப்படும்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (என்னிடம்) ஒரு பாத்திரத்தில் மதுவும் மற்றொரு பாத்திரத்தில் பாலும் (எனக்காகக்) கொண்டு வந்தார். நான் பாலைத் தேர்ந்தெடுத்தபோது, "இயற்கையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டீர்" என்று ஜிப்ரீல் கூறினார். [முஸ்லிம்]
இந்த பொன்மொழியிலிருந்து அறியவேண்டியவைகள்;
ஒவ்வொரு வானத்திற்கும் பிரத்தியேகமான காவலர்களை[வானவர்களை] அல்லாஹ் நியமித்துள்ளான்.
அல்லாஹ்வால் அழைக்கப்பட்டவர் மட்டுமே வின்னிற்குள் நுழையமுடியும்.
ஒவ்வொரு வானத்திலும் நபிமார்களை நபி[ஸல்] அவர்கள் சந்தித்துள்ளார்கள்.
அல்-பைத்துல் மஃமூர் [பூமியில் புனித பள்ளியாக காஃபா இருப்பதுபோல்] வானத்தில் உள்ள புனித பள்ளியாகும். இங்கு வானவர்கள் மட்டுமே தொழுவார்கள். ஒருமுறை தொழும் வானவர்களின் எண்ணிக்கை 70 ,000 பேர் ஆகும். ஒரு முறை அங்கு வணங்கியவர்கள் மீண்டும் வரமாட்டார்கள்.
ஒரு முறை தொழும் வானவர் 70 ,000 பேர். அவர்கள் மீண்டும் அங்கு வரமாட்டார்கள் எனில், அல்லாஹ் கணக்கிலடங்கா வானவர்களை படைத்திருக்க கூடும்.
படிப்பினைகள்;அல்லாஹ் தன் அடியார்களுக்கு ஆரம்பமாக ஐம்பது நேர தொழுகையை கடமையாக்கினான். பின்பு நபி மூஸா[அலை] அவர்களின் அறிவுரையின் பேரில், நபி[ஸல்] அவர்கள் அல்லாஹ்விடம் கெஞ்சியதன் பயனாக அல்லாஹ் ஐந்து நேரமாக குறைத்ததோடு, ஒரு நற் செயலுக்கு பத்து மடங்கு கூலியை வழங்குவதாக அறிவித்துவிட்டான். இந்த அடிப்படையில் நாம் முறையாக, உரிய நேரத்தில் ஐவேளை தொழுகையை நிறைவேற்றினால் அல்லாஹ் ஐம்பது நேரம் நாம் தொழுத நன்மையை பதிவு செய்வான். இத்தகைய சிறப்பு வாய்ந்த தொழுகையை இன்று முஸ்லீம் சமுதாயத்தில் பெரும்பாலோர் பாழடித்து வருவதையும், வெள்ளிக்கிழமை அல்லது பெருநாள் மட்டும் தொழுபவர்களாகவும் இருப்பதை பார்க்கிறோம். அல்லாஹ் நம்மீது கருணை காட்டிஐம்பதை மாற்றி ஐந்தாக தந்தானே, அதற்கு நன்றி செலுத்தும் வகையில் நாம் ஐவேளை தொழுபவர்களாகவும், சுன்னத்தான-நபிலான தொழுகையை நிறைவேற்றுபவர்ஆகவும் நாம் மாறவேண்டும்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" நான் (மிஅராஜ் - விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களைக் கண்டேன். [நூல்;புஹாரி எண் 3241 ]
படிப்பினைகள்; எழ்மை நிலையில் இருக்கும் நம்மில் சிலர், 'என்ன வாழ்க்கை இது; அல்லாஹ்வை நாம் அனுதினமும் வணங்கி வரும் நமக்கு ஏன் இந்த கஷ்ட நிலையோ' என்று அங்கலாய்ப்பதை பார்க்கிறோம். எழ்மைநிலையில் இருப்பவர்கள் வருந்தவேண்டியதில்லை. ஏனெனில் நிரந்தர சொர்க்கத்தில் அதிகமாக பிரவேசிக்கப்போவது ஏழைகள்தான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
பெண்கள் அதிகமாக நரகம் செல்லக்காரணம் என்ன? மற்றொரு நபி மொழி நமக்கு தெளிவாக்குகிறது.'ஹஜ்ஜுப் பெருநாளன்றோ நோன்புப் பெருநாளன்றோ தொழும் திடலிற்கு நபி(ஸல்) அவர்கள் சென்று கொண்டிருந்தபோது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்று, 'பெண்கள் சமூகமே! தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே என எனக்குக் காட்டப்பட்டது' என்று கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! ஏன்' என்று அப்பெண்கள் கேட்டதற்கு, 'நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்; மார்க்கக் கடமையும் அறிவும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை மாற்றி விடக்கூடியவர்களாக உங்களை விட வேறு யாரையும் நான் காணவில்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது 'இறைத்தூதர் அவர்களே! எங்களுடைய மார்க்கக் கடமையும் எங்களுடைய அறிவும் எந்த அடிப்படையில் குறைவாக உள்ளன' என்று பெண்கள் கேட்டனர். 'ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக் கருதப்படவில்லையா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டததற்கு, 'ஆம்' என அப்பெண்கள் பதில் கூறினர். 'அதுதான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகிறது; ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும்விட்டு விடுவதில்லையா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கும் 'ஆம்!' எனப் பெண்கள் பதில் கூறினர். 'அதுதான் பெண்கள் மார்க்கக் கடமையில் குறைவானவர்களாக இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாகும்" என்று நபி(ஸல்) கூறினார்கள்" என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார். [நூல்;புஹாரி எண் 304 ]
இந்த நபிமொழியில் பெண்கள் நரகம் செல்லும் காரணியாக மூன்று செயல்களை நபி[ஸல்] அவர்கள் அறிவிக்கிறார்கள் இந்த மூன்று செயல்களும் இருக்கும் பெண்கள் அதை மாற்ற முன்வரவேண்டும்.
மகத்துவமும், கண்ணியமும் நிறைந்த இறைவன் என்னை மிஃராஜுக்கு அழைத்துச் சென்ற போது நான் ஒரு சமுதாயத்தைக் கடந்து சென்றேன். அவர்களுக்கு செம்பினால் நகங்கள் இருந்தன. (அவற்றால்) தங்கள் முகங்களையும், மார்புகளையும் அவர்கள் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். ""ஜிப்ரீலே! இவர்கள் யார்?'' என்று நான் கேட்டேன். ""இவர்கள் (புறம் பேசி) மக்களின் இறைச்சி சாப்பிட்டு, அவர்களின் தன்மான உணர்வுகளைக் காயப்படுத்திக் கொண்டிருந்தவர்கள்'' என்று பதிலளித்தார்கள்.
நூல்கள்: அபூதாவூத் 4235, அஹ்மத் 12861
படிப்பினைகள்;புறம் பேசுவதை சர்வசாதரனாக செய்து கொண்டிருக்கிறோம். இதில் விதிவிலக்கானவர்கள் 'மைக்ரோ பாய்ண்ட்'அளவே தேறுவர். இந்த மாபாதக செயலுக்கும்மறுமையில் கிடைக்கும் தண்டனையைத்தான் மேற்கண்ட நபி மொழி விளக்குகிறது. இனியேனும் திருந்துவோமாக!
அல்லாஹ் நபி[ஸல்] அவர்களுக்கு 'அல்கவ்ஸர்' எனும் தடாகத்தை மறுமையில் வழங்குவான். அந்த அல்-கவ்ஸர் பற்றி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' ('அல்கவ்ஸர்' எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலை விட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியை விட நறுமணம் வாய்ந்தது. அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகிறார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடையமாட்டார்கள். நூல்;புஹாரி ]
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த தடாகத்தில் நபி[ஸல்] அவர்களின் உம்மத்தினர் அனைவரும் நீரருந்திவிடமுடியுமா எனில் சிலர் தடுக்கப்படுவார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' நான் (மறுமை நாளில் 'அல்கவ்ஸர்' எனும்) என்னுடைய தடாகத்தின் அருகே இருந்தவாறு என்னிடம் வருகிறவர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். அப்போது என்னை நெருங்கிவிடாமல் சிலர் பிடிக்கப்படுவார்கள். அப்போது நான் '(இவர்கள்) என் சமுதாயத்தார்' என்பேன். அதற்கு 'உங்களுக்குத் தெரியாது. (நீங்கள் உலகைவிட்டுப் பிரிந்த பின்னால்) இவர்கள் வந்தவழியே அப்படியே திரும்பிச் சென்றார்கள்' என்று கூறப்படும்.[நூல்;புஹாரி எண் 7048 ]
இந்த பொன்மொழியில் வந்தவழியே திரும்பி சென்றவர்கள் தடாகத்திற்கு நீரருந்த வரமுடியாது. நபியவர்களின் திருக்கரத்தால் நீரருந்தும் பாக்கியம் அவர்களுக்கு கிட்டாது. திரும்ப செல்லுதல், என்றால் மதம் மாறுவது மட்டும் என்று பொருளல்ல. மாறாக இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்னால், நாம் செய்து கொண்டிருந்த எந்த ஒரு தீய செயலையும் இஸ்லாத்திற்கு வந்த பின்னும் தொடர்ந்தால் அதுவும் வந்தவழியே செல்வதாகும். உதாரணத்திற்கு இஸ்லாத்தில் அல்லாஹ்வை தவிர வேறு எவரிடமும் உதவிதேடக்கூடாது என்பது சட்டம். ஆனால் முஸ்லிம்களில் சிலர் தர்காக்களில் மண்ணோடு மண்ணாக மக்கிப்போனவர்களிடம் பல்வேறு உதவிகளை தேடுகின்றனர். அதோடு இஸ்லாத்தில் சடங்கு சம்பிரதாயம் எதுவும் இல்லை. ஆனால் முஸ்லிம்களில் சிலர் ஒரு குழந்தை பிறப்பது முதல் அக்குழந்தை வளர்ந்து வாலிபனாகி, முதுமையடைந்து இறப்பதுவரை ஏன் இறந்த பின்னும் எண்ணற்ற சடங்கு சம்பிரதாயங்களை செய்வதை காணலாம். இதுபோன்ற செயல்கள் வந்த வழியே திரும்பி செல்வதாகும். எனவே மார்க்கம் நபி[ஸல்] அவர்களோடு முற்று பெற்று விட்டது. நபி[ஸல்] அவர்களுக்கு பின்னால் எவர் எதை சொன்னாலும் அது குர்ஆண்- ஹதீஸுக்கு முரணாக இருந்தால் தூக்கி எறிந்து விட்டு குர்ஆண்- ஹதீஸை மட்டும் பின்பற்ற அமுல்படுத்த முஸ்லிம்கள் முன்வரவேண்டும். அப்போதுதான் தடாகம் நீரும் கிடைக்கும்-தடையின்றி சொர்க்கம் செல்லவும் முடியும்.
எல்லாம் வல்ல அல்லாஹ், நபி[ஸல்] அவர்களின் விண்ணுலக பயணத்தை எந்த படிப்பினைக்காக ஆக்கினானோ அதை புரிந்து அமல் செய்யக்கூடியவர்களாக நம்மை ஆக்கியருள்வானாக!
Tuesday, June 21, 2011
சிந்திக்க சில நபிமொழிகள்
2) மக்களை அமைதியுடன் செவி தாழ்த்தி கேட்கும்படி செய்வீராக! எனக்கூறிவிட்டு (மக்கள் அமைதியுற்ற பின்னர்) எனக்குப் பிறகு நீங்கள் ஒருவர்; கழுத்தை ஒருவர் வெட்டிக்கொள்ளும் காபிர்களாக மாறிவிட வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின் உரையில் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜரீர் (ரழி) நூல்: புஹாரி (121).
3) ஒரு கட்டிடத்தின் பகுதி இன்னொரு பகுதியை எப்படி வலுப்படுத்திகொண்டிருக்கிறதோ அது போலவே ஒரு முஃமின் இன்னொரு முஃமின் விஷயத்தில் நடந்து கொள்ள வெண்டும். என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் தங்கள் விரல்களை கோர்த்துக் காட்டினார்கள்.அறிவிப்பவர் : அபூ மூஸா (ரழி) நூல்: புஹாரி (481).
4) ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரனாவான். அவனுக்கு அவன் அநீதியிழைக்கவுமாட்டான், அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும் படி) கை விட்டு வடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபடுகிறாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ் ஈடுபடுகிறான். எவர் ஒரு முஸ்லிமின் துன்பத்தை நீக்குகிறாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) நூல்: புஹாரி (2442).
5) உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்திற்கு உள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனக்கு உதவி செய் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு மக்கள் அல்லாஹ்வின் தூதரே! அக்கிரமத்திற்கு உள்ளானவருக்கு நாங்கள் உதவி செய்வோம் ஆனால் அக்கிரமக்காரனுக்கு எப்படி உதவி செய்வோம்? என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவனை அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து விடு(ங்கள்) இதுவே நீ(ங்கள்) அவனுக்கு செய்யும் உதவி என்று கூறினார்கள்.அறிவிப்பவர் : அனஸ் (ரழி) நூல்: புஹாரி (2444).
6) ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும், (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். உடலின் ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்தக்கொண்டிருக்கின்றன, அத்துடன் உடல் முழுவதும் காய்ச்சல் கண்டு விடுகிறது என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : நுஃமான் பின் பஸீர் (ரழி) நூல்: புஹாரி (4011).
7) ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள், பிணங்கிக்கொள்ளாதீர்கள், (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்த ஒரு முஸ்லிமும் தம் சகோதரனுடன் முன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரழி) நூல்: புஹாரி (4045).
8) மக்களை அதிகமாக சுவர்க்கத்தில் புகுத்துபவை இறையச்சமும் நற்குணமும்தான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல் : திர்மிதீ, ஹாகிம்.
9) இறைநம்பிக்கையாளன் குத்திப் பேசுபவனாகவும் அடிக்கடி சாபமிடுபவனாகவும் இருப்பது இல்லை. மானங்கெட்ட செயல்புரிபவனாகவும், சண்டையில் தீய வார்த்தைகள் பேசுபவனாகவும் இருப்பதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூதர்தா (ரழி). நூல் : ஹாகிம்.
10) வெட்கம் இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாகும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரழி). நூல் : புகாரி, முஸ்லிம்.
11) ஒருவர் மற்றவர்மீது அக்கிரமம் புரியாமல், ஒருவர் மற்றவர் மீது பெருமை கொள்ளாமல் பணிந்தவர்களாக இருங்கள் என்று எனக்கு வஹி (இறைசெய்தி) அறிவிக்கப்பட்டுள்ளது என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இயான் இப்னு ஹிமார் (ரழி). நூல் : புகாரி, முஸ்லிம்.
12) எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலேயே காக்கிறாரோ அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ தர்தா (ரழி). நூல் : திர்மிதி.
13) மக்களே! ஸலாமைப் பரப்புங்கள்! உறவினரோடு சேர்ந்து வாழுங்கள்! உணவளியுங்கள்! மேலும் இரவில் மக்கள் தூங்கும் போது நீங்கள் (எழுந்து) தொழுங்கள். அப்போது நீங்கள் சுவர்க்கத்தில் அமைதியுடன் நுழையலாம் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ்; இப்னு ஸலாம்; (ரழி). நூல் : புகாரி, முஸ்லிம்.
14) ''நயவஞ்சகனுடைய அடையாளங்கள் மூன்று. (1)அவன் பேசினால் பொய்யே பேசுவான். (2)அவன் வாக்குறுதி கொடுத்தால் மாறு செய்வான். (3)அவனிடம் ஒரு பொருள் அல்லது பணி தொடர்பான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால் அதில் மோசடி செய்வான்'' என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புகாரி, முஸ்லிம்.
15) பகைமை கொள்பவர்களும், தீயவர்களும் (தான்) அல்லாஹ்விடத்தில் கெட்டவர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபுதர்தா (ரழி). நூல் : திர்மிதி
16) கடுமையாகச் சண்டையிடுபவன், மனதில் பகைமையை வைத்திருப்பவன் அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரியவன் ஆவான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரழி). நூல்: முஸ்லிம்.
17) பொறாமை கொள்ளாதிருக்கும்படி உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில் நெருப்பு விறகைத் தின்று விடுவதைப் போன்று பொறாமை நற்செயல்களைத் தின்று விடும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்: அபூதாவூத்;.
18) நான் உங்களை சந்தேகப்பட வேண்டாமென்று எச்சரிக்கின்றேன். ஏனெனில், செய்திகளில் மிகவும் பொய்யானது சந்தேகமேயாகும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புகாரி, முஸ்லிம்.
19) எவன் ஒரு முஸ்லிமுக்கு தீங்கு இழைக்கின்றானோ, அல்லாஹ் அவனுக்கு தீங்கிழைப்பான். எவன் ஒரு முஸ்லிமை கஷ்டத்தில் ஆழ்த்துகிறானோ, அல்லாஹ் அவனை கஷ்டத்தில் ஆழ்த்துவான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அபூஸிர்மா (ரழி). நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ.
21) நமக்கும் அவர்களுக்குமிடையே (காபிர்களுக்கு மிடையே) இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் தொழுகையேயாகும். யார் அதனை விட்டுவிட்டாரோ அவர் காஃபிராகி விட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : புரைதா (ரழி). நூல்கள் : திர்மிதி, அபூதாவுத், அஹ்மது, இப்னுமாஜா, நஸயீ, இப்னு ஹிப்பான்.
22) இரண்டு தொழுகைகள் முனாஃபிக்கீன்களுக்கு பாரமாக இருக்கிறது. ஃபஜ்ருடைய ஜமாஅத்தும், இஷாவுடைய ஜாமாஅத்தும். இந்த இரண்டிலும் உள்ள நன்மைகளை அவர்கள் அறிவார்களேயானால், பள்ளிக்கு தவழ்ந்து வந்தாயினும் தொழுகையில் கலந்து விடுவர் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புஹாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ, நஸயி.
23) இறந்தவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் (கப்ரு) மற்றும் குளியலறையைத் தவிர, பூமி முழுவதுமே அல்லாஹ்வை தொழும் இடம் (மஸ்ஜித்) ஆகும். என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல் குத்ரி(ரழி). நூல் :திர்மிதீ.
24) தொழுகையில் இமாமுக்கு மறதி ஏற்படும்போது ஆண்கள் ''ஸூப்ஹானல்லாஹ்'' என்று கூறவேண்டும், பெண்கள் கையைத் தட்ட வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புஹாரி, முஸ்லிம்.
Friday, June 17, 2011
உங்கள் கண்களை மூடிக்கொண்டு, இதயத்தை சற்றுதிறந்து வைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் கண்களை மூடிக்கொண்டு, இதயத்தை சற்றுதிறந்து வைத்துக் கொள்ளுங்கள்.....
இப்போது கற்பனையில் உங்கள் முன்னால்.... ஓருஜனாஸா,
நான்கு பேர் நான்கு மூலைகளையும் சுமந்தவண்ணம் உங்களை நெருங்கி வருகின்றனர்.
உங்கள் முன்னிலையில் ஜனாஸா வைக்கப்படுகின்றது.
அதற்கான தொழுகையை நிறைவேற்றுவதற்காக அனைவரும் அணிவகுத்து நிற்கின்றனர்..
நான்கு தக்பீர்கள் சொல்லப்படுகின்றன. கடைசி த்தக்பீருடன் தொழுகை முடிகின்றது.
இப்போது உங்கள் மனதில் ஒரு நெருடல்....
அந்த மையித் யாருடையது என்பதை பார்க்கவேண்டும் போல் ஓர் உணர்வு.
அடிமேல் அடி எடுத்து நெருங்குகின்றீர்கள். அதன் முகத்தை மூடியிருக்கும் அதன் திறையை மெதுவாக அகற்றுகின்றீர்கள்.
?????????????????????????
???????????????????????
இப்போது
இப்போது
நீங்கள் பார்த்தது யாரையோ அல்ல உங்கள் சொந்த முகத்தைதான்!!!!!!!!!!
நீங்கள்தான் அங்கே மையித்தாக வைக்கப்பட்டுள்ளீர்கள்.
ஆசைப்பட்டு உங்களை மாய்த்துக்கொண்டு உழைத்துத் திரிந்த உங்கள் வாழ்க்கை முடிந்துவிட்டது.
மாடிக்கட்டடங்கள் கட்டுவதற்காக ஹஜ் போகாது சேர்த்த உங்கள் பணம் பிரயோசனமற்றதாகிவிட்டது.
தொழும் நேரங்களை மறந்த்து நீங்கள் கலந்துகொண்ட கூட்டங்கள் வீணாகிவிட்டது..
உங்கள் ஆடம்பரவாகனங்கள்,
குழந்தைச் செல்வங்கள்,
அன்புமனைவி..........எல்லாமே முடிந்துவிட்டது.
இப்போது உங்களுக்காக எஞ்சி இருப்பது நீங்கள் உடுத்தி இருக்கும் உங்கள் கபன் பிடவைமட்டுமே!!
உங்கள் உற்றார் உறவினர்கள் உங்களை சுமந்து உங்கள் நிரந்ததர வீட்டில் வைத்துவிட்டார்கள்.
ஒரு பிடி மண் உங்கள் மேல் விழுகிறது.
உலகமே இடிந்து விழுந்துவிட்டது போல் உணர்கிறீர்கள்.
கொஞ்சமாகத் தெரிந்து கொண்டிருந்த வெளிச்சம் இப்போது அடியோடு இல்லாமல் போய்விட்டது.
இந்தநிமிடம் .... காரிருளில் நீங்கள் மட்டுமாக
தனித்துவிடப்பட்டுவிட்டீர்க
எல்லோரும் நடந்துசொல்லும் நிலமட்டத்திற்கு கீழால் ஆரடி நிலத்தில் நீங்கள் மட்டும் ..
நீங்கள் மட்டும் தனித்துவிடப்பட்டுவிட்டீர்க
காசோ பணமோ,
குழந்தைகளோ, மனைவியோ இல்லாததனிமை ..
குறந்தபட்சம் ஓர்கையடக்கத் தொலைபேசியாவது, இல்லாததனிமை..
இரண்டு மலக்குமார் உங்களை நோக்கிவந்து கொண்டிருக்கிறார்கள்..
இப்போது நீங்கள் என்னபதில் கூறத்தயாராகி இருக்கின்றீர்கள்..
அந்த நிமிடத்தை கொஞ்சம் கற்பனையில் கொண்டுவந்து, (இந்தக்கேள்விகளை கொஞ்சம் கேட்டுப்பாருங்கள்..)
நான் உண்மையான ஒருமுஃமீனா??
குரானின் ஒளியில் வாழ்கிறேனா?? தொழுகையை விடாது தொழுகிறேனா??
வருடம் ஒரு முறை வரும் ரமலானில் அல்லாஹ்வுக்காக நோன்பு நோற்கின்றேனா??
கடமையான ஹஜ்ஜை உரியமுறையில் நிறைவேற்றுகின்றேனா?
போன்ற இன்னோரன்ன கேள்விகளுக்கு ஆம் என்ற விடையை தைரியமாக கூறப்போகின்றீர்களா?
இல்லை....
காலத்தை வீணாகக் கடத்திவிட்டேனே..
ஒரு முறையாவாது அல்லஹ்வின் திருப்பொருத்தத்திற்காக ஹஜ் செய்திருக்கலாமே,
500/= நோட்டுக்களை விளம்பரத்துடன் கொடுத்ததற்குப்பதிலாக, யாருக்கும் தெரியாமல் நன்மைகளை கொள்ளை அடித்திருக்களாமே..
என்நோயை சாட்டுவைத்து நோன்புகளை விட்டுவிட்டேனே, கொஞ்சம் மனச்சாட்சிக்கு பொருத்தமாக நடந்து கொண்டிருக்களாமே..
வட்டி எடுக்காமல் லாபமோ நட்டமோ வியாபாரத்தையே முழுமனதாக செய்திருக்களாமே..
குரான் கூறிய ஹிஜாபின் வாழ்க்கையை வாழ்ந்திருக்களாமே
அன்னிய ஆடவர்களின் முன்னால் என் அழங்காரத்தை மறைத்து கணவனுக்கு மட்டும் காட்டி இருக்கலாமே..
குழந்தைகளை சிறந்தமுறையில் வளர்த்திருக்கலாமே..
தொலைக்காட்சியின் முன்மண்டியிட்டதற்குப்பதிலா
தொலைபேசியில் அரட்டை அடித்ததற்குப்பதிலாக குரானுடன் உரையாடி இருக்களாமே, இல்லைஏதாவதுபயனுள்ளபுத்த்க
என கைசேதப்படப் போகின்றீர்களா??????
சிந்தியுங்கள்!!
உலக வாழ்க்கை என்பது ஒரு முறைதான், அதுகாத்திருக்கும் ஒரு இடமல்ல.. காத்திருந்தாலும் இழந்தால் மீண்டும் கிடைப்பதில்லை. இம்மை என்பது ஒரு பயணம் தாமதிக்காமல் எம்மை மறுமையின் வாசலில்கொண்டு சேர்த்திடும்.. அந்தப் பயணத்தில் கண் மூடித்தனமாய் காலத்தை கழிக்காமல் திட்டமிட்டு எம்மை நாம் வளப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இல்லையேல்.. எம்வாழ்வும்இவ்விறைவாக்குகளின்
நஊதுபில்லாஹிமின்ஹா...
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَن ذِكْرِ اللَّهِ وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُوْلَئِكَ هُمُ الْخَاسِرُونَ ﴿9﴾ ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் - எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்.
وَأَنفِقُوا مِن مَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ ﴿10﴾ உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள், (அவ்வாறு செய்யாது மரணிக்கும் சமயம்); "என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே" என்று கூறுவான்.
وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاء أَجَلُهَا وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ ﴿11﴾
ஆனால், அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் - நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கு தெரிந்தே இருக்கின்றான்.
கடைசித் தருணத்தில் இறைவனிடம் கெஞ்சும் துரதிஷ்டவாளிகளாய் நாம் இருக்காது, எம்மை இறைவனின் பாதையில் திசை திருப்பிக் கொள்ளவேண்டும்.
ஏனெனில் இறைவன் தன் அருள்மறையில்
لاَ يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُواْ مَا بِأَنْفُسِهِمْஎந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை. (சூராரஃத் 11)எனக்கூறுகிறான்.
இளைய சமூகத்தின் எழுச்சி
துனீஷியாவில் துவங்கி எகிப்தை ஆட்டிப்படைத்து லிபியா, பஹ்ரைன், ஜோர்டான், அல்ஜீரியா, யெமன், மொராக்கோ என தீவிரமடைந்துள்ள மக்கள் எழுச்சிப் போராட்டத்தை ஆய்வுச் செய்யும்பொழுது முதலில் நமக்கு தெரியவரும் உண்மை என்னவெனில் 18-30 வயதுடை இளைஞர்கள்தாம் இத்தகைய போராட்டங்களின் முக்கியசக்தி என்பதாகும்.
அவர்களில் ஆண்கள், பெண்கள்,ஷியா, சுன்னி, முதலாளி, தொழிலாளி, டாக்டர்கள், எஞ்சினீயர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் அடங்குவர்.
ஏதேனும் கட்சிகளோ, இயக்கங்களோ, மத அமைப்புகளோ, தலைவர்களோ இவர்களை வழி நடத்திச் செல்லவில்லை. இத்தகையதொரு எதிர்பாராத உயிர்தெழல் கண்முன்பாக நிதர்சனமான பொழுது சுதந்திரத்திற்காகவும், நீதிக்காகவும், பல ஆண்டுகளாக போராடிய கட்சிகளும் அமைப்புகளுமெல்லாம் மக்கள் எழுச்சிப்பிரவாகத்தில் பங்காளிகளானார்கள்.
கிளர்ந்தெழுந்த மக்கள் எழுச்சியிலிருந்து ஆட்சியை பாதுகாக்க தள்ளாடும் வயதிலும் தந்திரங்களை பயின்றும் அவை பலனற்றுப் போனதால் தடுமாறி வீழ்ந்தனர் ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள்.
துனீஷியாவின் பின் அலியும், எகிப்தின் ஹுஸ்னி முபாரக்கும் மரணத்திற்கு போராடுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அடக்குமுறைக்கும், அகங்காரத்திற்கும் பெயர் பெற்ற லிபியாவின் முஅம்மர் கத்தாஃபியும் இதர அரபுலக ஆட்சியாளர்களும் மக்கள் எழுச்சியை இரத்தக் களரியால் இனி எவ்வளவு காலம் அடக்கி ஒடுக்கிவிட முடியும்? என்னவாயினும், ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் காலில் போட்டு மிதித்துவிட்டு அரசு கருவூலத்தையும் நாட்டையும் குடும்ப சொத்தாக்கிய ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் இனியும் அதிக நாட்கள் பதவியில் தொடரமுடியாது என்பது உறுதியாகும்.
இவர்களை வைத்து சித்து விளையாட்டுக்களை ஆடிய அமெரிக்கா உள்ளிட்ட மேலாதிக்க சக்திகளும், சியோனிஸ்டுகளும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மனித குல வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய அபூர்வமான இந்த புரட்சியின் முழு சொந்தக்காரர்களும் இளைஞர்கள்தாம் என்பது உலகம் அறிந்துக்கொள்ள வேண்டிய முதல் பாடமாகும்.
ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பம் அளித்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி, பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான கொடூரமான அடக்குமுறையை தாண்டி புரட்சிக்கு அழைப்பு விடுத்த இளைஞர்கள், எத்தகைய அரசியல் நெருக்கடிகளையும், அடக்குமுறைகளையும் தங்களது மன உறுதியின் மூலம் வெல்ல முடியும் என்பதை நிரூபித்திருக்கின்றார்கள்.
பாரம்பரிய அச்சு ஊடகங்களும், சேனல்களும் சுய ஆதாயங்களுக்காக செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்த வேளையில் அராஜகங்களுக்கும், அடக்குமுறைகளுக்கும் எதிராக குரல் எழுப்பவும், சுதந்திரத்திற்காக போராடவும் வேறு வழிகளை தேர்ந்தெடுக்க அனுபவம் அவர்களுக்கு கை கொடுத்தது.
ஜனநாயகத்தின் உயிரற்ற சடலங்களாக மாறிவிட்ட நாடுகளில் வாக்குச்சீட்டிற்கு கிழிந்த காகிதத்தின் மதிப்புக்கூட இல்லை என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். அழுகிற குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கிக்கொடுத்து அவர்களது அழுகையை அடக்குவதுபோல பந்தையும், கோர்ட்டையும், க்ளப்பையும், பணத்தையும் அளித்து கால்பந்து ஜுரத்தை வளர்த்து இளைய தலைமுறையினரின் ஆவேச உணர்வுகளை வீரியமற்றதாக மாற்றிவிடலாம் என்பது ஏகாதிபத்தியவாதிகளின் தந்திரமாகும்.
சிந்தனையை முடக்கி ஒழுக்கச் சீரழிவுகளையும், பாலியல் வக்கிரங்களையும் உருவாக்கும் சினிமா, தொலைக்காட்சி தொடர்கள், மதுபானம், சூதாட்டம் ஆகியவற்றின் வாசல்களை திறந்துவிட்டு எழுதிக்கொடுத்ததை வாசிக்கும் மார்க்க அறிஞர்களை கைப்பாவையாக்கிய ஆட்சியாளர்களுக்கு இறைவனைப் பற்றிய பயம் என்பது அறவே இல்லாமல் போனது.
என்றைக்காவது ஒருநாள் இளைய சமூகம் மாத்தி யோசிக்கவேக் கூடாது என்ற பிடிவாதத்தில் இத்தகைய அநாகரீகங்களை புரிந்து வந்தார்கள் அவர்கள்.
ஆனால், எல்லா கனவுகளும், திட்டங்களையும் தகர்த்து எறிந்த அரபுலக இளைஞர்கள் தங்கள் கைகளில் கட்டப்பட்டிருந்த விலங்குகளையெல்லாம் அறுத்தெறிந்துவிட்டு ஏகாத்தியபாதிகளுக்கெதிராக வீதிகளில் அணி திரண்டுள்ளனர்.
இளைய சமூகத்தின் எதிர்பாராத எழுச்சிப் பேரலையின் முன்னால் இறைவனின் மற்றும் மக்களின் எதிரிகளான சர்வாதிகாரிகள் மண்டியிடுவதோடு முகங்குப்புற நிலம் கவ்வுவதை உலகம் கண்டுகொண்டுதானிருக்கிறது.
நிச்சயமாக இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு இந்த நிகழ்வுகளிலிருந்து படிப்பினைகள் உள்ளன. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் நமது நாடும் ஒன்று. இங்கே மாற்றத்தின் வாசல்கள் திறந்து கிடப்பதால் மக்கள் எழுச்சிக்கெல்லாம் சாத்தியமே இல்லை என சிலர் ஆறுதலடையலாம். ஆனால், நமது ஜனநாயகம் பணத்திமிரும் மதவெறியும் பிடித்த குற்றவாளிகளின் கரங்களில் சிக்கி சின்னாப் பின்னமாகிக் கொண்டிருக்கிறது. ஊழல் மற்றும் மோசடியின் கொடூரமான கரம் இறுகப் பற்றிக்கொண்டிருக்கும் வேளையில் நாம் ஆறுதலடைவதற்கு என்னக் காரணம் இருக்கிறது என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.
கிரிக்கெட்டின் ஜுரத்திலும், சினிமாவின் மோகத்திலும் இளைஞர்களை மூழ்கடித்துவிட்டு தாங்கள் சுகபோகமாக ஆட்சிச் செய்யலாம் என இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகள் கனவுகளை கண்டுக் கொண்டிருக்கின்றன. கோடிகளை கொள்ளையடித்துவிட்டு சில இலவசங்களை அளித்து நாட்டு மக்களை திருப்திபடுத்தினால் போதும் என்ற சிந்தனை அரசியல் கட்சிகளை ஆட்கொண்டுள்ளது.
மதவெறியையும், ஜாதீய வெறியையும் தூண்டிவிட்டு அதில் குளிர்காய்ந்து வருகின்றனர் தேசபக்த வேடம்போடும் சில போலிகள்.
இந்தியாவில் மிகப்பெரிய நிர்ணாயக சக்தி இளைஞர்களாவர். அவர்களை அரசியலிருந்து ஒதுக்கி நிறுத்திவிட்டு உணர்வற்ற சடலமாக மாற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்றாலும் உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்துவரும் எழுச்சிப் போராட்டங்களை அவர்கள் கண்டுகொள்ளவில்லை எனக் கருதுவது மூடத்தனமாகும்.
பண்டாரங்களும், பரதேசிகளும், கூத்தாடிகளுமெல்லாம் தலைவராக தலை நிமிர்த்தி நடந்துகொண்டு ‘எனக்கு பின்னால் லட்சக்கணக்கானோர் அணி திரண்டுள்ளனர்’ என வீம்பு பேசுவது இனி அதிக நாள் நீடிக்காது. வயோதிகர்களால் வழிநடத்தப்படும் கட்சிகளில் இளைஞர்கள் பலிகடாவாக்கப்படுவது வெகு நாட்கள் தொடராது. புரட்சி என்பது பேலட் பேப்பரிலோ அல்லது புல்லட்டிலோ அல்ல. இளைஞர்களின் எழுச்சியின் மூலமாகத்தான் என்ற புதிய பாடத்தை அனைவரும் படித்தேயாக வேண்டும். இளைய தலைமுறை தம்மை சுற்றியிருக்கும் மாயையைகளை விலக்கி விட்டு எழுச்சிப்பெற்றால் டெல்லி ஜந்தர்மந்தர் தஹ்ரீர் சதுக்கமாக மாற வெகு காலம் வேண்டிவராது.
மீடியா உலகில் முஸ்லிம்கள் – 11
கலீஃபா ஹாரூன் அல் ரஷீத் அவர்கள் பேரரசர் சார்லி மேக்னி (Emperor Charlemagne) என்ற கிறிஸ்தவ மன்னருக்குத் தூதுச் செய்தியை அனுப்பி நீண்ட காலமாக நிலவி வந்த பகைமையுணர்ச்சியைப் போக்கி நட்புறவையும், நல்லுறவையும் வளர்க்க முயற்சி செய்தார். ஆனால் ஐரோப்பா இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று சென்ற தொடரில் கண்டோம்.
ஆதலால் மனிதகுல வரலாற்றில் நாடுகளுக்கிடையில் பலப்பல போர்கள் நடைபெற்றன. பலப் பல மனித உயிர்கள் மாண்டன.
காலச் சக்கரம் உருண்டோடியது. நிலைமைகள் மாறின. பழைய பகைமையுணர்ச்சிகள் மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தன. புதிய உறவுகள் பூத்தன. நட்பு என்னும் நறுமணப் பூ நாடுகளெங்கும் மணக்கத் தொடங்கியது.
ஆனால் சிலுவைப் போர்கள் ஆயுதங்களால் செய்வது மட்டும்தான் ஒழிந்தது. அறிவால் செய்யப்படும் போர் தொடர்கின்றது.
இஸ்லாமைத் தவறாகச் சித்தரிக்கும் போக்கு இன்னும் தொடர்கின்றது. அந்த விஷம் கிறிஸ்தவ தலைமைப் பீடங்களால் இன்னும் ஐரோப்பிய மக்களுக்குப் புகட்டப்படுகிறது. அது ஐரோப்பியர்களின் மனங்களில் ஆழப் பதிந்துள்ளது.
ஆக, பகைமையின் விதை எப்பொழுதோ தூவப்பட்டு விட்டது. அதன் பலன்களைத்தான் முஸ்லிம் உலகம் அன்றிலிருந்து இன்று வரை அனுபவித்து வருகின்றது. அதனால்தான் கிறிஸ்தவர்கள் ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சிக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள். முஸ்லிம் ஸ்பெயின் என்பது அழிக்கப்பட்டது. அங்கே ஆட்சி புரிந்து வந்த கிரனடா பேரரசு 1492ம் ஆண்டு கிறிஸ்தவர்களால் கைப்பற்றப்பட்டது.
மேற்குலகுக்கும், முஸ்லிம் உலகுக்கும் உள்ள உறவு அடுத்ததாகப் பாதிக்கப்பட்டது துருக்கியர்கள் கான்ஸ்டாண்டிநோபிளைக் கைப்பற்றியபோது நடந்தது.
இப்படி மேற்குலகுக்கும், முஸ்லிம் உலகுக்கும் நடந்த போர்கள் கலாச்சார ரீதியாக மட்டுமல்லாமல், அரசியல் ரீதியாகவும் நிரந்தரமான பகையை நிலைநிறுத்தியது. ஆனால் இந்தச் சண்டைகளில் லாபம் அடைந்தது ஐரோப்பாதான். அது எப்படி என்று பார்ப்போம்.
இஸ்லாமியக் கலாச்சாரத்திலிருந்து, குறிப்பாக அரேபியர்களிடமிருந்து ‘காப்பி’ அடித்துத்தான் ஐரோப்பாவின் கலைகளும், விஞ்ஞானமும் வளர்ந்தன. ஐரோப்பாவின் மறுமலர்ச்சி என்பது முஸ்லிம்களிடமிருந்து அவர்கள் பெற்றதுதான்.
ஐரோப்பாவில் கிறிஸ்தவர்களிடையே பல பிரிவுகள் தோன்றின. அவர்களுக்குள் அடித்துக்கொண்டனர். ஆனால் இஸ்லாம் மீது அவர்கள் கொண்ட பகை மட்டும் அப்படியே நிலைத்து நின்றது.
இப்பொழுது ஒரு சந்தேகம் ஏற்படலாம். எப்பொழுதோ மதத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட விஷமப் பிரச்சாரம், எப்பொழுதோ நடந்த சிலுவைப் போர்கள், எப்பொழுதோ விதைக்கப்பட்ட பகையுணர்ச்சி இன்னுமா அங்கே நிலவுகிறது? இப்பொழுது அங்கே மத உணர்வு எல்லாம் மங்கிப் போய்க் கிடக்கின்றது. இந்தச் சூழ்நிலையிலும் அங்கே அதே பகைமையுணர்ச்சி இருக்கும் என்று எண்ணுவது எந்த வகையில் நியாயம்?
இப்படி சில கேள்விகள் நம் மனங்களில் எழலாம்.
இவை நியாயமான சந்தேகங்களே. ஆனால் நவீன மனோதத்துவவியலாளர்கள் சொல்வது என்னவென்றால், ஒரு மனிதனுக்கு அவனது குழந்தைப் பருவத்தில் விதைக்கப்படும் மத நம்பிக்கைகளை அவன் முழுவதுமாக இழந்து விடலாம். ஆனால் அந்த மதத்துடன் சம்பந்தப்பட்ட சில மூடநம்பிக்கைகள் அவனது உள்ளத்தில் இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கும்.
அதன் ஆழ, அகலம் வேண்டுமென்றால் ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம். ஆனால் ஒரு மேலைநாட்டவனை எடுத்துக்கொண்டால் அவனிடம் இஸ்லாத்திற்கெதிரான சிந்தனையே மேலோங்கி நிற்கும்.
மேற்குலகம் வெளியிட்டுள்ள புத்தகங்கள், இன்னபிற ஊடக வெளியீடுகளில் அவர்கள் இஸ்லாத்தை போர் வெறி பிடித்த மார்க்கமாகவும், முஸ்லிம்களை இரத்த வெறி பிடித்த காட்டேறிகளாகவுமே சித்தரிக்கின்றனர். இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதாக பரப்புகின்றனர். இதற்காக அவர்கள் நிறைய எழுத்தாளர்களையும், பத்திரிகையாளர்களையும் உருவாக்கி வைத்துள்ளனர்.
இஸ்லாமை பல்வேறு வகைகளாக அவர்கள் கூறு போடுகின்றனர். ‘வன்முறை இஸ்லாம்’, ‘அரசியல் இஸ்லாம்’, ‘தீவிரவாத இஸ்லாம்’ என்றெல்லாம் அவர்கள் தங்கள் மனம் போன போக்கில் இஸ்லாமை வகை பிரிக்கின்றனர்.
இன்று அதன் பரிணாம வளர்ச்சியாக ‘ஜிஹாதி இஸ்லாம்’ என்று ஒரு புதிய இஸ்லாமைச் சொல்கின்றனர்.
அவர்களிடமுள்ள சக்திவாய்ந்த மீடியாவைப் பயன்படுத்தி இஸ்லாம் என்றால் பயங்கரவாதம் என்றும், முஸ்லிம் என்றால் பயங்கரவாதி என்றும் பெரும்பாலான மக்களை நம்ப வைத்துள்ளனர்.
இதில் வேதனையும் வேடிக்கையும் என்னவென்றால் இவர்களது பொய்ப் பிரச்சாரத்தில் முஸ்லிம்களும் வீழ்ந்ததுதாம்.
ஆம்! இன்று முஸ்லிம்களும் இஸ்லாத்தில் வன்முறை உள்ளது என்று கருதுகிறார்கள். பேசுகிறார்கள். அதற்கேற்றாற்போல் சில முஸ்லிம் பெயர்தாங்கிகளும் மேற்குலகுக்குக் கிடைத்துள்ளனர். அவர்களை வைத்து இந்தப் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர். இந்த முஸ்லிம் பெயர்தாங்கிகள் அவர்களின் எஜமானர்களுக்கு விசுவாசமாக நடந்துகொள்கின்றனர்.
ஆக, மொத்த மீடியாவில் நடந்துகொண்டிருக்கும் விஷமப் பிரச்சாரங்களின் பின்னணி இதுதான். இந்தப் பின்னணியைப் புரிந்துகொண்டால்தான் இதற்குப் பிறகு வரும் விஷயங்கள் நன்றாகப் புரியும்.
சிலுவைகள் பற்றியும், அவை ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றியும் விரிவாக அறிய விரும்புவோர் முஹம்மத் அஸத் (Muhammad Asad) எழுதிய Islam at the Cross Roads என்ற நூலைப் படிக்கவும்இருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்!.
நான் சரியான இஸ்லாமிய அடிப்படையில் வாழ்கிறேனோ இல்லையோ, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
மார்க்க சம்பந்தமான அறிவு எனக்கு இருக்கிறதோ இல்லையோ, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
என் மனைவி – மக்கள், குடும்பத்தினருக்கு நான் இஸ்லாத்தைப் பற்றி கூறி நல்வழிப் படுத்துகிறேனோ இல்லையோ, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
எனது இல்லத்தில் இஸ்லாத்திற்கு மாறான செயல்கள் நடப்பதைக் கண்டும் காணாமல் இருந்து விடுகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
மறுமை நாளைக்காக நான் எதை சேர்த்து வைத்திருக்கிறேன் என்று எண்ணிப் பார்க்க இந்த அவசர கால உலகத்தில் எங்கே முடிகிறது இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
ஐந்து வேளைத் தொழுவது கடமை என்பது எனக்குத் தெரியும். ஆனால் என் வேலைப் பளுவினால் என்னால் தொழமுடியவில்லை, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
ரமலானில் நோன்பு வைப்பது கட்டாயம் என்பது சிறுபிள்ளைக்கும் தெரியும். இருப்பினும் பசி தாகம் சமாளிக்க.. நோன்பு வைக்க என்னால் முடியவில்லை, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
என் தொழிலில் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. எனினும் கணக்குப் பார்த்து ஜகாத் கொடுத்திட மனம் இடம் தரவில்லை, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
என் வாழ்நாள் முழுவதும் ஓடி ஓடி உழைத்து ஓரளவு என் குடும்பத்திற்காக உழைத்து சேர்த்து ஓய்ந்து விட்டேன். இப்போது ஹஜ் செல்லும் அளவுக்கு என் உடலில் தெம்பு இல்லை இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
வீட்டில் அபிவிருத்தி வேண்டி மவ்லீது ராத்தீபுகளை புது புது மெட்டுகளில் ஓதி இறையருள் பெற முயற்சிக்கிறேன். இதெல்லாம் தவறு என்று உள்மனம் கூறுகிறது, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!உன்னையே வணங்குகிறோம், உன்னிடமே உதவி கோருகிறோம்! என்று தொழுகையில் ஓதிவிட்டு அவ்லியாக்கள், பெரியார்களிடம் உதவி தேடுவது என் இரத்தத்தில் ஊறிப்போய்விட்டது, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
என் நாட்டம் நிறைவேற சலவாத்துன்னாறியா 4444 தடவை ஓதி துஆ கேட்கிறேன். இது குர்ஆன்-ஹதீஸில் இல்லை என்றாலும் என் மன ஆறுதலுக்காக, அபிவிருத்திக்காக இதை ஓதுவதற்கு ஏற்பாடு செய்கிறேன். இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
பால்கிதாப்-பில்லி-சூனியம்-ஏவல்
பூனை குறுக்கே செலவது, பல்லி தலையிலே விழுவது, ஆந்தை அலருவது, காகம் கரைவது, ஸஃபர் பீடை மாதம்-கெட்ட சகுனம் என எல்லாம் பார்த்து பார்த்து ஒவ்வொரு வேலையும் செய்கிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
பலர் பாராட்ட கத்னா-பூப்புனித நீராட்டு விழாவை விமரிசையாக நான் நடத்துகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
புதுமனை புகுவிழாவிற்கு பால் காய்ச்சி விழா நடத்துகிறேன். குழந்தைக்கு தர்காவில் சென்று முடி இறக்கி மொட்டை போடுகிறேன். அவ்லியா சன்னிதானத்தில் ஆடு, சேவல் பலி தருகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
என் அம்மாவின் கடைசி ஆசைக்காகத்தான் மஹர் கொடுத்து மணம் புரியாமல் வரதட்சணை வாங்கிக் கொண்டு திருமணம் செய்தேன். என் மனைவியின் ஆசைக்காகத்தான் சுன்னத்தான தாடியை சிரைத்துவிட்டேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
என் தந்தையின் வற்புறுத்தலால் என் மகன் திருமணத்தை மேள தாளத்துடன் யானை ஊர்வலத்துடன் மிக ஆடம்பரத்துடன் நடத்துகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
வட்டி வாங்கக்கூடாது என்று வான் மறைக்கூறினாலும் கூட என் தொழில் வளர்ச்சிக்காக குறைந்த வட்டியில் வீடுகட்ட, கடை ஆரம்பிக்க, பைக் சவாரிக்காக வட்டி வாங்க வேண்டிய நிர்பந்தம். என்ன செய்வது? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
லாட்டரி சூதாட்டம்தான். அரசு அதனை தடை செய்திருந்தாலும் என்ன? நான் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை வாங்கி மறைத்து விற்பனை செய்து வருகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
குடி குடியைக் கெடுக்கும்! மது ஹராம்தான், ஆனால் எனக்கு டாஸ்மார்க் கம்பெனியில்தான் வேலை கிடைத்தது. கைநிரைய சம்பாதிக்கிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
சினிமா பார்க்கக் கூடாதாம்! இந்த காலத்தில் நடக்கக்கூடிய காரியமா என்ன? பேரும் புகழும் பேரின்பமும் பெற்றுத் தரும் கனவுத் தொழிற்சாலையல்லவா அது! பாம்பு மட்டும்தான் படம் எடுக்குமா? மக்கள் பாராட்டும் விதமாக நான் கூட படம் எடுக்கிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
அளவு நிலுவையில் மோசடி கூடாதாம். வியாபாரத்தில் பொய் கூடாதாம். (பரக்கத்) இறையருள் கிடைக்காதாம். பொய் சொல்லாமல், மோசடி செய்யாமல் எப்படி விரைவில் பணக்காரன் ஆவதாம்? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
ஒரு சாண் நிலம் ஆக்கிரமிப்பு செய்தாலும் மறுமையில் ஒரு பூமி அளவு நிலத்தை நான் சுமக்க வேண்டுமாம். பலரின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த, அந்த நிலத்தை திரும்பக் கொடுத்து விட்டு என் பிள்ளைகளுக்கு எதைக் கொடுத்துவிட்டுப் போவதாம்? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கூடாதாம். பிறகு எதற்கு உலகத்தில் வாழ்வதாம்? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
என் குடும்பத்தில் என் நான்கு பிள்ளைகள், நான்கு மத்ஹப்களில் இருக்கின்றனர். நானும் என் தம்பிகளும் எல்லா அரசியல் அமைப்பிலும் அங்கம் வகிக்கிறோம், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
கடவுள், பாவம், புண்ணியம், நீதி, நியாயம், உண்மை என்கிறவற்றில் நம்பிக்கை கிடையாது. ஏதோ உலகத்திலே பிறந்துட்டோம். முளைக்கிற செடி வளர்ந்து மரமாகிற மாதிரி நாமும் வளர்ந்துட்டோம். ஏதோ வாழந்துட்டு இருக்கிறோம். ஊரோடு இணைந்து போகத்தானே வேண்டும். இஸ்லாமிய அடிச்சுவட்டில் இக்காலத்தில் வாழ்ந்தால் உலகம் நகைக்காதா? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
(அல்ஜன்னத்) ஆசிரியர்: போதும்! போதும்!! கொஞ்சம் இடம் கொடுத்தா, பக்கம் பக்கமாக மானம்-விமானம் ஏற்றிடுவீங்க போலிருக்கே..?.
ரேசன் கார்டிலும், வாக்காளர் அட்டையிலும், பள்ளி கல்லூரி சான்றிதழ்களிலும் மட்டுமே முஸ்லிமாக வாழ்பவர்களே! சிந்தியுங்கள். நமது வாழ்வும். மரணமும் தூய இஸ்லாத்தின் அடிப்படையில் மட்டுமே அமைந்திட வேண்டும் என்பதை உள்ளத்தில் பதித்துக் கொள்ளுங்கள்.
நன்றி: அல் ஜன்னத் (2011).
Poem Of The End - Death
When death knocked upon a bedroom door,
Who is there? the sleeping one cried.
I'm Azrael, let me inside.
At once, the man began to shiver,
As one sweating in deadly fever,
He shouted to his sleeping wife,
Don't let him take away my life.
Please go away, O Angel of Death!
Leave me alone, I'm not ready yet.
My family on me depends,
Give me a chance, O please prepense!
The angel knocked again and again,
Friend! I'll take your life without a pain,
Tis your soul Allah requires,
I come not with my own desire.
Bewildered, the man began to cry,
O Angel I'm so afraid to die,
I'll give you gold and be your slave,
Don't send me to the unlit grave.
Let me in, O Friend! The Angel said,
Open the door, get up from your bed,
If you do not allow me in,
I will walk through it.
The man held a gun in his right hand,
Ready to defy the Angel's stand.
I'll point my gun, towards your head,
You dare come in, I'll shoot you dead.
By now the Angel was in the room,
Saying, O Friend! prepare for you doom.
Foolish man, Angels never die (like men),
Put down your gun and do not sigh.
Why are you afraid! Tell me O man,
To die according to Allah's plan?
Come smile at me, do not be grim,
Be Happy to return to Him.
O Angel! I bow my head in shame,
I had no time to take Allah's Name.
From morning till dusk,I made my wealth,
Not even caring for my health.
Allah's command I never obeyed,
Nor five times a day I ever prayed.
A Ramadan came and a Ramadan went,
But no time had I to repent.
The Hajj was already FARD (compulsory) on me,
But I would not part with my money.
All charities I did ignore,
Taking usury more and more.
Sometimes I sipped my favourite wine,
With flirting women I sat to dine.
O Angel! I appeal to you,
Spare my life for a year or two.
The Laws of Quran I will obey,
I'll begin SALAT (prayer) this very day.
My Fast and Hajj, I will complete,
And keep away from self conceit.
I will refrain from usury,
And give all my wealth to charity,
Wine and wenches I will detest,
Allah's oneness I will attest.
We Angels do what Allah demands,
We cannot go against His commands.
Death is ordained for everyone,
Father, mother, daughter or son.
I'm afraid this moment is your last,
Now be reminded, of your past,
I do understand your fears,
But it is now too late for tears.
You lived in this world, two score and more,
Never did you, your people adore.
Your parents, you did not obey,
Hungry beggars, you turned away.
Your two ill-gotten, female offspring,
In night-clubs, for livelihood they sing.
Instead of making more Muslims,
You made your children non-Muslims.
You ignored the Mua'dhin Adhaan, (call for prayer)
Nor did you read the Holy Quran.
Breaking promises all your life,
Backbiting friends, and causing strife.
From hoarded goods, great profits you made,
And your poor workers, you underpaid.
Horses and cards were your leisure,
Money-making was your pleasure.
You ate vitamins and grew more fat,
With the very sick, you never sat.
A pint of blood you never gave,
Which could a little baby save.
O Human, you have done enough wrong,
You bought good properties for a song.
When the farmers appealed to you,
You did not have mercy, tis true.
Paradise for you? I cannot tell,
Undoubtedly you will dwell in hell.
There is no time for you to repent,
I'll take your soul for which I am sent.
The ending however, is very sad,
Eventually the man became mad
With a cry, he jumped out of bed,
And suddenly, he fell down dead.
O Reader! Take moral from here,
you never know, your end may be near
change your living and make amends
For heaven, on your deeds depends.
If this poem inspires you,
it can help someone too.